/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் 21ல் மல்லசமுத்திரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
வரும் 21ல் மல்லசமுத்திரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வரும் 21ல் மல்லசமுத்திரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வரும் 21ல் மல்லசமுத்திரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : செப் 08, 2024 01:11 AM
வரும் 21ல் மல்லசமுத்திரத்தில்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல், செப். 8-
'வரும், 21ல் மல்லசமுத்திரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 21 காலை, 9:00 முதல், மாலை, 3:00 மணி வரை, மல்லசமுத்திரம், மகேந்திரா கல்வி நிறுவனங்களில் நடக்கிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். முகாமில், 5-ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையற்பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுயவிபரம், உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொள்ளவும்.
வேலையளிப்போரும், வேலைநாடுனர்களும் www.tnprivatejobs.tn.gov.in, http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேலையளிக்கும் நிறுவனங்கள் 04286--222260 அல்லது 6380369124 என்ற தொலைபேசி, மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.