/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு புஷ்ப அலங்காரம்
/
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு புஷ்ப அலங்காரம்
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு புஷ்ப அலங்காரம்
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு புஷ்ப அலங்காரம்
ADDED : மே 02, 2024 07:38 AM
நாமக்கல், : சுப கிரகமான குரு பகவான், நேற்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம் நடந்தது.
நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோவில் எதிரே, ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக, ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு, 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறபு பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு
நறுமண பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சுவாமிக்காக விசேஷமாக உருவாக்கப்பட்ட மலர் மாலைகளை கொண்டு சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

