நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையோரம் வளர்ந்த முள் செடி-களை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம், பிச்சம்பட்டி வழியாக பழையஜெயங்கொண்டம் பஞ்சப்பட்டி வரை நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக, மக்கள் வாகனங்களில் செல்-கின்றனர். தற்போது சாலை இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, மாயனுார் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணியாளர்களை கொண்டு கிருஷ்ணராயபுரம், கோவக்குளம், பிச்-சம்பட்டி ஆகிய இடங்களில் சாலையோரத்தில் வளர்ந்த முள் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடந்தது.