/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள் மீட்பு
/
கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள் மீட்பு
ADDED : ஆக 31, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகளை தீய-ணைப்பு துறையினர் மீட்டனர்.
ராசிபுரம் அடுத்த, அய்யம்பாளையம் மாசிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பழனிசாமி, 55. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று, மூன்று மயில் குஞ்சுகள் தவறி விழுந்-தன. 100 அடி ஆழமுள்ள கிணறு
என்பதால், மயில் குஞ்சுகளால் வெளியே வர முடியவில்லை. விவசாயிகளும் கிணற்றில் இறங்க தயங்கினர்.இதையடுத்து ராசிபுரம் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், மூன்று மயில் குஞ்சுகளையும் உயிருடன் மீட்டனர்.