/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
/
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
ADDED : மே 02, 2024 11:31 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எஸ்.ஐ., ஆறுமுக நயினார், எஸ்.எஸ்.ஐ., ஜானகிராமன், ஏட்டு பிரகாசம் உள்ளிட்ட போலீசார், திருசெங்கோடு அடுத்த பணங்காட்டுபாளையம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த பதிவு எண் இல்லாத ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 7 மூட்டைகளில், 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ஈரோடு மாவட்டம், பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தங்கராஜ், 38, என்பதும், பொது மக்களிடம் இருந்து, ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, திருச்செங்கோடு பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கும், இனிப்பகங்களுக்கும் மற்றும் அதிக விலைக்கு கேட்கும் நபர்களுக்கும் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், கடத்தி வரப்பட்ட, 700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னிவேன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

