/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நோயாளி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
/
நோயாளி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
ADDED : ஆக 09, 2024 03:41 AM
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் உணவு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி, அங்கு சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாமக்கல் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் என தினமும், 1,000க்கு மேற்-பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் உள் நோயாளிக-ளுக்கு மருத்துமனை நிர்வாகத்தால், மூன்று நேரம் உணவு வழங்-கப்படுகிறது.
சில நாட்களுக்கும் முன், நாமக்கல்லை சேர்ந்த மாதேஸ்வரி, 60, சிகிச்சைக்காக வந்தார். உடல்நிலை சரியில்லாததால் தொடர்ந்து உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்குள்ள நோயாளிகளுக்கு நேற்று காலை 8:30 மணி வரை உணவு வழங்கப்படாததால், மருத்துவமனை நிர்வா-கத்தை கண்டித்து திடீரென, மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் மருத்துவமனை ஆர்.எம்.ஓ.,(பொ) நீலாதரன், செவி-லியர்கள் மற்றும் நல்லிபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 10:00 மணிக்கு சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ-மனை டீன் சாந்தா அருள்மொழியிடம் கேட்டபோது, ''புகாருக்கு இடம் அளிக்காத வகையில் மருத்துவமனை நிர்வாகம் செயல்-பட்டு வருகிறது. தர்ணாவில் ஈடுபட்ட பெண், வேண்டுமென்றே அது சரி இல்லை; இது சரி இல்லை என பொய்யான குற்றச்சாட்-டுகளை கூறி வருகிறார். அரசு மருத்துவமனையை இடமாற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இவரும் ஒருவர்,'' என்றார்.