ADDED : ஜூலை 21, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:பரமத்தி அருகே, தொட்டிப்பட்டியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. சாய்பாபாவுக்கு குருபூர்ணிமா விழா நடக்கிறது. அதனை முன்னிட்டு, இன்று காலை, 8:00 மணிக்கு சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நைவேத்தியம் தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு சாய் சத்திய விரத பூஜை மற்றும் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.
தொடர்ந்து சாய் சத் சரிதம் பாராயணம் மற்றும் சாய் நாம ஜெபம் நடக்கிறது. கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் மாலை, 3:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.