/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கற்றல் அடைவுக்கான 100 நாள் சவால் 75 பள்ளி ெஹச்.எம்.,களுக்கு விருது
/
கற்றல் அடைவுக்கான 100 நாள் சவால் 75 பள்ளி ெஹச்.எம்.,களுக்கு விருது
கற்றல் அடைவுக்கான 100 நாள் சவால் 75 பள்ளி ெஹச்.எம்.,களுக்கு விருது
கற்றல் அடைவுக்கான 100 நாள் சவால் 75 பள்ளி ெஹச்.எம்.,களுக்கு விருது
ADDED : ஜூலை 09, 2025 01:35 AM
நாமக்கல், கற்றல் அடைவுக்கான, 100 நாள் சவாலில், நாமக்கல் மாவட்டத்தில், 75 பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின், கற்றல் திறனை அதிகரிக்க, தொடக்கக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஆண்டு தோறும் சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களை தேர்வு செய்து, 'அறிஞர் அண்ணா' விருது, 'பேராசிரியர் அன்பழகன்' விருது வழங்கி வருகிறது.
மேலும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் கற்றல் திறனை அதிகரித்தல், தமிழ், ஆங்கிலம் சரளமாக வாசிக்கும் தன்மை, கணிதத்தின், 4 அடிப்படை செயலிகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவற்றை திறம்பட கற்று கொடுத்தல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் தலைமையாசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது.
இதற்கு, 'கற்றல் அடைவுக்கான 100 நாள் சவால்' என பெயரிடப்பட்டுள்ளது. 100 நாட்களில் மேற்கண்ட திறன்களை முழுமையாக பெற்ற மாணவ, மாணவியரை கொண்ட பள்ளிகளை தேர்வு செய்து, தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில் தலா, 5 பள்ளிகள் என, 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பள்ளிகளில் '100 நாள் சவால்' பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பள்ளிகளை, கலெக்டர், டி.இ.ஓ., ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட, 75 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, திருச்சியில் நடந்த விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் விருது வழங்கினார்.
மாவட்டத்தில் எலச்சிபாளையம் ஒன்றியம், மேட்டுப்புதுார் பஞ்., துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பழனியப்பன், ஆன்றாபட்டி பஞ்., துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் நடராஜன், திம்மராவுத்தம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சித்ராம்பாள், பொம்மம்பட்டி பஞ்., துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் முகில்மதி, உஞ்சனை பஞ்., தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சுமதி உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
விருது பெற்ற பள்ளி தலைமையாசிரிர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பச்சமுத்து ஆகியோர்
பாராட்டினர்.