/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
12ல் 8 தாலுகா அலுவலகத்தில்ரேஷன் நுகர்வோர் குறைதீர் முகாம்
/
12ல் 8 தாலுகா அலுவலகத்தில்ரேஷன் நுகர்வோர் குறைதீர் முகாம்
12ல் 8 தாலுகா அலுவலகத்தில்ரேஷன் நுகர்வோர் குறைதீர் முகாம்
12ல் 8 தாலுகா அலுவலகத்தில்ரேஷன் நுகர்வோர் குறைதீர் முகாம்
ADDED : ஏப் 10, 2025 01:39 AM
12ல் 8 தாலுகா அலுவலகத்தில்ரேஷன் நுகர்வோர் குறைதீர் முகாம்
நாமக்கல்:'வரும், 12ல், மாவட்டத்தில் உள்ள, எட்டு தாலுகா அலுவலகங்களில், பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும், மாதந்தோறும், பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. அதில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, பொது வினியோக திட்ட சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க, ரேஷன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், வரும், 12 காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, எட்டு தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடக்கிறது.
பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.