sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 1,250 டன் ரேஷன் அரிசி

/

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 1,250 டன் ரேஷன் அரிசி

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 1,250 டன் ரேஷன் அரிசி

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 1,250 டன் ரேஷன் அரிசி


ADDED : அக் 15, 2025 01:12 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன மூலப்பொருட்களான, சோளம், புண்ணாக்கு, சோயா உள்ளிட்டவை, வடமாநிலங்களில் இருந்துவரத்தாகிறது.

இதேபோல், ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும் பெரும்பாலும் ஆந்திரா, தெலுங்கானா, பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும், திருவாரூர், தஞ்சாவூர், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு வாங்கிவரப்படுகிறது.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான, 1,250 டன் ரேஷன் அரிசியை, திருவாரூரில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து, 45க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலுார் உள்ளிட்ட பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு கொண்டு

செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us