ADDED : மே 09, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 123 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 561 ரூபாய், குறைந்தபட்சமாக, 420 ரூபாய், சராசரியாக கிலோ, 530 ரூபாய்க்கு விற்பனையானது. 126 கிலோ பட்டுக்கூடு, ரூ.67 ஆயிரத்துக்கு விற்பனையானது.