sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

12,600 போஸ்டர்கள் அகற்றம் மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு

/

12,600 போஸ்டர்கள் அகற்றம் மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு

12,600 போஸ்டர்கள் அகற்றம் மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு

12,600 போஸ்டர்கள் அகற்றம் மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு

1


ADDED : ஏப் 06, 2024 02:22 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 02:22 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், நாமக்கல் மாவட்டத்தில், 12,682 இடங்களில் பேனர், போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக, 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

லோக்சபா தேர்தல் தேதி கடந்த, 16ல் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏப்., 19ல் முதல்கட்டத்திலேயே ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பொது இடங்களில் இருந்த கட்சி விளம்பரங்கள், பேனர்கள், சுவர் விளம்பரம், போஸ்டர், கொடி கம்பம் உள்ளிட்டவை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி நகர் பகுதியில் தனியார் இடங்களில் இருந்த கட்சி அடையாளங்களும் அகற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் பொது இடங்களில் இருந்த, 1,372 சுவர் விளம்பரங்கள், 4,400 போஸ்டர்கள், 1,699 பேனர்கள், 2,749 கொடிக்கம்பங்கள் என, 10,220 இடங்களில் கட்சி அடையாளங்கள் அகற்றப்பட்டன. இதேபோல், தனியார் இடங்களில் இருந்த, 1,104 சுவர் விளம்பரங்கள், 1,129 போஸ்டர்கள், 150 பேனர்கள் உள்ளிட்ட, 2,462 இடங்களில் கட்சி சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன. மொத்தம், 12,682 இடங்களில் கட்சி சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக, 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான உமா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us