/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
155 கிலோ பட்டுக்கூடு ரூ.81,000க்கு விற்பனை
/
155 கிலோ பட்டுக்கூடு ரூ.81,000க்கு விற்பனை
ADDED : டிச 31, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 155 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 666 ரூபாய், குறைந்தபட்சம், 399 ரூபாய், சராசரி, 524 ரூபாய் என, 155 கிலோ பட்டுக்கூடு, 81,000 ரூபாய்க்கு விற்பனையானது.