sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

1.6 டன் ரேஷன் அரிசிகடத்திய 2 பேர் கைது

/

1.6 டன் ரேஷன் அரிசிகடத்திய 2 பேர் கைது

1.6 டன் ரேஷன் அரிசிகடத்திய 2 பேர் கைது

1.6 டன் ரேஷன் அரிசிகடத்திய 2 பேர் கைது


ADDED : ஏப் 09, 2025 01:52 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1.6 டன் ரேஷன் அரிசிகடத்திய 2 பேர் கைது

வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, மதியம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., ஆறுமுகநயினார் தலைமையில், வெண்ணந்துார் போலிசார் மற்றும் பறக்கும்படை ஆர்.ஐ., முருகேசன் ஆகியோர், மதியம்பட்டி ஏரிக்கரையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த, 'டாடா சுமோ' காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 1,610 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் கோபால், 44, செல்லதுரை மகன் கோகுல்ராஜ், 24, என்பதும்; ஆட்டையாம்பட்டி பகுதியில் மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, தொட்டியப்பட்டியில் உள்ள தனியார் கோழிப்பண்ணைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோபால், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us