sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 17,411 மாணவர்கள் தயார்

/

மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 17,411 மாணவர்கள் தயார்

மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 17,411 மாணவர்கள் தயார்

மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 17,411 மாணவர்கள் தயார்


ADDED : பிப் 08, 2024 12:18 PM

Google News

ADDED : பிப் 08, 2024 12:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மாநிலத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச், 1ல் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தேர்வை, 17,411 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில், பள்ளிக்

கல்வித்துறை மூலம் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச், 1ல் துவங்கி, 22 வரை நடக்கிறது. அதேபோல், பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, 25ல் முடிகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி என, மொத்தம், 197 பள்ளிகளை சேர்ந்த, 8,479 மாணவர்கள், 8,932 மாணவியர் என, மொத்தம், 17,411 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், பிளஸ் 1 தேர்வில், 9,151 மாணவர்கள், 9,304 மாணவியர் என, மொத்தம், 18,455 பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்காக, 86 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு, 'டாப் சீட்' எனப்படும் 'முகப்புத்தாள்', விடைத்தாள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர், தங்களுக்கு தேவையான டாப் சீட், விடைத்தாள்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து, டாப் சீட் மற்றும் விடைத்தாள் வைத்து தைத்து, தேர்வு நேரங்களில் மாணவ, மாணவியருக்கு வழங்குவர்.

மேலும், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, வரும், 12ல் துவங்குகிறது. இந்த தேர்வுகள், குறிப்பிட்ட நாட்களில் முடிக்கவும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் முடிக்கி விட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us