ADDED : செப் 30, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம் குமாரபாளையம் பகுதியில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., நடராஜ் தலைமையிலான போலீசார், குமாரபாளையம் ராஜா வீதி, பழைய சவுண்டம்மன் கோவில் பகுதி, ஆனங்கூர் பிரிவு ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்ற, கார்த்தி, 33, வடிவேல், 47, ஆகிய இருவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.