sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

/

20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : நவ 08, 2024 07:22 AM

Google News

ADDED : நவ 08, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பரமத்தி மற்றும் பொத்தனுார் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் ஹோட்டல்கள், துரித உணவு கடைகள், டீக்கடை, குளிர்பான கடை, மளிகை, பேக்கரி, உள்ளிட்ட கடைகள் அடங்கும். மேற்கண்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது மற்றும் பயன்படுத்துவதாக டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு புகார் வந்தது. பொத்தனுார் மற்றும் பரமத்தி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சுப்பிரமணி தலைமையில், டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர்.

இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் விற்பது தெரியவந்தது. மொத்தம், ஒன்பது கடைகளுக்கு, 6,900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும என, செயல் அலுவலர் சுப்பிரமணி எச்சரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us