sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டிபன் கடை உரிமையாளர் வீட்டில் 21.5 பவுன், ரூ.7 லட்சம் திருட்டு

/

டிபன் கடை உரிமையாளர் வீட்டில் 21.5 பவுன், ரூ.7 லட்சம் திருட்டு

டிபன் கடை உரிமையாளர் வீட்டில் 21.5 பவுன், ரூ.7 லட்சம் திருட்டு

டிபன் கடை உரிமையாளர் வீட்டில் 21.5 பவுன், ரூ.7 லட்சம் திருட்டு


ADDED : மே 08, 2024 04:46 AM

Google News

ADDED : மே 08, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : நாமக்கல்லில், தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து, 21 பவுன் நகை, 7 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

நாமக்கல், மோகனுார் சாலை கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் செந்தில், 48. இவரது மனைவி நிர்மலா. தம்பதியருக்கு பிரகதீஷ் என்ற மகன் உள்ளார். தள்ளுவண்டி வைத்து செந்தில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த, 5 மாலை, 4:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, தனது மனைவி, மகனுடன், சேந்தமங்கலம் அடுத்த மகாதேவியில் உள்ள மருமகன் வீட்டுக்கு, திருவிழாவிற்காக சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 21.5 பவுன் நகை, 7 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.இது குறித்து, நாமக்கல் போலீசில் செந்தில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.* கடந்த, 30ல், நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் பத்மநாபன், 60, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 34.5 பவுன் நகையை திருடி சென்றனர். இந்த குற்றவாளிகளை போலீசார் இதுவரை கைது செய்யாததுடன், யார் என்ற துப்பும் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், டிபன் கடை உரிமையாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பணம், நகையை திருடி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us