/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவிலில் 216 கிடா பலியிட்டு 10,000 பேருக்கு அசைவ விருந்து
/
கோவிலில் 216 கிடா பலியிட்டு 10,000 பேருக்கு அசைவ விருந்து
கோவிலில் 216 கிடா பலியிட்டு 10,000 பேருக்கு அசைவ விருந்து
கோவிலில் 216 கிடா பலியிட்டு 10,000 பேருக்கு அசைவ விருந்து
ADDED : பிப் 17, 2025 03:24 AM
ப.வேலுார்,: நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே, சேளூர் சாணார்பாளை-யத்தில், 56 அடி உயரம் கொண்ட பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம், கிடா வெட்டு பூஜை நடப்பது வழக்கம். நடப்-பாண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. பல்வேறு வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. அன்-றிரவு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய, 216 ஆட்டுக்கி-டாக்களை பலியிட்டு பூஜை செய்தனர்.
தொடர்ந்து நேற்று காலை, 9:00 மணிக்கு சமைக்கப்பட்ட அசைவ உணவை, சுவாமிக்கு படையலிட்டு தீபாராதனை காட்-டப்பட்டது. பின் பக்தர்களுக்கு அசைவ விருந்து வைக்கப்பட்-டது. இதில், 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று காலை கோழிகள் பலியிட்டு மறு பூஜை நடக்கிறது. மதியம் மறு அபிஷேகம், தீபாராதனையுடன் விழா நிறைவடைகி-றது.

