sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 'இ-நாம்' மூலம் 2.5 டன் மிளகு விற்பனை

/

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 'இ-நாம்' மூலம் 2.5 டன் மிளகு விற்பனை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 'இ-நாம்' மூலம் 2.5 டன் மிளகு விற்பனை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 'இ-நாம்' மூலம் 2.5 டன் மிளகு விற்பனை


ADDED : டிச 17, 2024 01:47 AM

Google News

ADDED : டிச 17, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, டிச. 17-

நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்தாண்டு முதல் முறையாக, 2.5 டன் மிளகு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நியாயமான விலையில் சந்தைப்படுத்தவும், உரிய விலை பெறவும் தமிழகம் முழுவதும், 21 விற்பனைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளின் கட்டுப்பாட்டில், 227 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள்

உள்ளன.

இவைகள் மூலம் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கமிஷன் இன்றி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விற்பனை கூடங்களிலேயே சேமிப்பு கிடங்கு, விவசாய பொருட்களை அடமானம் வைத்து பொருளீட்டு கடன் பெறும் வசதி ஆகியவை உள்ளது.

பா.ஜ., பொறுப்பேற்ற பின் ஒழுங்குமுறை கூடங்களை நவீனமாக்க தொடங்கியது. 'இ.நாம்' திட்டம் மூலம் ஒரு பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து, 'ஆன்லைன்' மூலம் இந்தியாவில் எந்த ஒரு இடத்தில் இருந்தும் வியாபாரிகள் வேளாண் பொருட்களை ஏல முறையில் வாங்கும் வசதியை கொண்டு வந்தது. இதையடுத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அறிவிக்கப்பட்ட வேளாண் பொருட்கள் மட்டுமின்றி அறிவிக்கப்படாத வேளாண் பொருட்களையும் ஏலம் மூலம் விற்க தொடங்கினர்.

நாமகிரிப்பேட்டை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல், நிலக்கடலை, சோளம், கம்பு, ராகி, எள், ஆமணக்கு, புளி, மிளகாய், கரும்பு வெல்லம், தேங்காய், மஞ்சள், உளுந்து ஆகியவை அறிவிக்கப்பட்ட வேளாண் பொருட்களாகும். ஆனால், கடந்த, 2022 நவ., மாதத்தில் இருந்து இ.நாம் திட்டம் இங்கு செயல்பட தொடங்கியது. இதையடுத்து முதல் முறையாக கடந்த ஆண்டு, கொல்லிமலையில் விளையும் மிளகை முதல் முறையாக, 'இ.நாம்' மூலம் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

கடந்தாண்டு, 2.5 டன் மிளகு, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இந்தாண்டு, கொல்லிமலையில் விலையும் காபி கொட்டையையும், 'இ.நாம்' ஏலத்தில் கொண்டுவர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us