/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை
ADDED : டிச 02, 2024 02:54 AM
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 25 டன் காய்க-றிகள், 11.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. இங்கு தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்க-றிகள், பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்-றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து அவற்றை வாங்கிச் செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
தற்போது, கார்த்திகை துவங்கியுள்ளதால், ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் மேற்கொள்ளும் பலர், அசைவத்தை கைவிட்டு, சைவத்திற்கு மாறியுள்ளனர். மேலும், நேற்று முதல் திருமண முகூர்த்த சீசன் துவங்கியுள்ளது. இதனால் நேற்று, வழக்-கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்-தது. மொத்தம், 126 விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்ப-னைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம், 21,065 கிலோ காய்-கறிகள் மற்றும் 4,200 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என, மொத்தம், 25,285 கிலோ எடையுள்ள விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்-டன. அவற்றை, 5,057 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 11 லட்சத்து, 20,240 ரூபாய்க்கு விற்பனையானது.