sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை

/

நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை


ADDED : டிச 03, 2024 01:24 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 2-

நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 25 டன் காய்கறிகள், 11.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து அவற்றை வாங்கிச் செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

தற்போது, கார்த்திகை துவங்கியுள்ளதால், ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் மேற்கொள்ளும் பலர், அசைவத்தை கைவிட்டு, சைவத்திற்கு மாறியுள்ளனர். மேலும், நேற்று முதல் திருமண முகூர்த்த சீசன் துவங்கியுள்ளது. இதனால் நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 126 விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம், 21,065 கிலோ காய்கறிகள் மற்றும் 4,200 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என, மொத்தம், 25,285 கிலோ எடையுள்ள விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 5,057 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 11 லட்சத்து, 20,240 ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us