ADDED : ஏப் 16, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.2.50 கோடிக்கு மாடு விற்பனை
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கேரளாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால், அங்கிருந்து மாடுகள் வாங்கி செல்ல ஏராளமான வியாபாரிகள் புதன்சந்தைக்கு படையெடுத்தனர். இதனால், நேற்று நடந்த மாட்டு சந்தையில் விற்பனை அதிகரித்து, 2.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.