/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் 30 டன் காய்கறி விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் 30 டன் காய்கறி விற்பனை
ADDED : நவ 25, 2024 03:06 AM
நாமக்கல்: சபரிமலை சீசன் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ஒரே நாளில், 30 டன் காய்கறிகள், பழங்கள், 13.80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர்சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும் அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்-களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடு-முறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவை-யான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
தற்போது கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதால், ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் மேற்கொள்ளும் பலர் அசை-வத்தை கைவிட்டு, சைவத்திற்கு மாறியுள்ளனர். இதனால் நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 198 விவசாயிகள் உழவர் சந்-தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்-தனர். மொத்தம், 25,485 கிலோ காய்கறிகள், 4,760 கிலோ பழங்கள், 15 கிலோ பூக்கள் என மொத்தம், 30,260 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்-பட்டு விற்பனை செய்யப்பட்டன.
மொத்தம், 6,052 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வருகை தந்து காய்கறி, பழங்களை வாங்கி சென்றனர். நேற்று உழவர் சந்-தையில், தக்காளி ஒரு கிலோ, 35 ரூபாய், கத்தரி, 40 ரூபாய், வெண்டை, 48 ரூபாய், புடலங்காய், 46 ரூபாய், பீர்க்கங்காய், 80 ரூபாய், பாகற்காய், 52 ரூபாய், அவரை, 80 ரூபாய், சின்ன வெங்-காயம், 45 ரூபாய், பெரிய வெங்காயம், 70 ரூபாய், தேங்காய், 52 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. இதன் மதிப்பு, 13 லட்சத்து, 79,995 ரூபாயாகும்.
ராசிபுரம்...
ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 197 விவசா-யிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்-தனர். 17,700 கிலோ காய்கறி, 6,940 கிலோ பழங்கள், 350 கிலோ பூக்கள் என மொத்தம், 24,990 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 10.69 லட்சம் ரூபாய் ஆகும். 4,840 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.