/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட அளவில் கலைப்போட்டி 320 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்
/
மாவட்ட அளவில் கலைப்போட்டி 320 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்
மாவட்ட அளவில் கலைப்போட்டி 320 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்
மாவட்ட அளவில் கலைப்போட்டி 320 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்
ADDED : அக் 07, 2024 03:43 AM
நாமக்கல்: கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவிலான கலைப்-போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, 2024-25ம் ஆண்டில், 5-8, 9-12, 13-16 வயது சிறார்களுக்கிடையே, கலை ஆர்வத்தை ஊக்கு-விக்கும் வகையில், குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப்பிரிவுகளில், மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படுகிறது.
மாவட்ட கலைப்போட்டி-களில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவிலான போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் பாராட்டுத்தொகை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், கோட்டை மாநகர உயர்நிலைப்பள்-ளியில், மாவட்ட அளவிலான கலைப்போட்டி, நேற்று நடந்தது. அதில், குரலிசை போட்டி, பரதநாட்டிய போட்டி, நாட்டுப்புற நட-னப்போட்டி, ஓவியப்போட்டி நடந்தது.
இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, 320 மாணவ, மாணவியர் பங்-கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில், முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்-பட்டனர்.