sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் உழவர் சந்தையில் 36 டன் காய்கறி ரூ.14 லட்சத்திற்கு விற்பனை

/

நாமக்கல் உழவர் சந்தையில் 36 டன் காய்கறி ரூ.14 லட்சத்திற்கு விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 36 டன் காய்கறி ரூ.14 லட்சத்திற்கு விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 36 டன் காய்கறி ரூ.14 லட்சத்திற்கு விற்பனை


ADDED : ஜன 20, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழகத்தில் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 36 டன் காய்கறிகள், 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

தற்போது, தை மாதம் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளது. இதனால், நேற்று வழக்கத்தை விட விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 159 விவசாயிகள், 30,495 கிலோ காய்கறிகள், 5,675 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 36,190 கிலோ விளைபொருட்கள் கொண்டுவந்து விற்பனை செய்தனர். அவற்றை, 7,238 பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். அதன் மூலம், 14 லட்சத்து, 9,385 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 20, கத்தரி, 25, வெண்டை, 50, புடலங்காய், 50, சின்ன வெங்காயம், 80, பெரிய வெங்காயம், 40, பூண்டு, 270 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us