ADDED : ஆக 11, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், டாக்டர் சுப்பராயன் ரோடு பகு-தியில் உள்ள டாஸ்மாக் கடையில், அப்பகுதியை சேர்ந்த பாலு, 64, என்பவர், 'பார்' நடத்தி வரு-கிறார்.
இந்நிலையில், நேற்று மல்லசமுத்திரம் எஸ்.ஐ., ரஞ்சித்குமார் தலைமையிலான போலீசார், பாரில் சோதனையிட்டனர். அப்போது, சட்டத்-துக்கு விரோதமாக, மது பாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சூரியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராசுக்குட்டி, 63, மோர்பாளையத்தை சேர்ந்த சேகர், 40, கருமாபுரம் பகுதியை சேர்ந்த வேலு, 32, ஆகியோரை கைது செய்தனர்.