/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு
/
15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு
15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு
15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு
ADDED : ஜூலை 05, 2024 12:19 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணியின்போது இறந்த, 15 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான நல வாரியத்தில், ஆட்டோ ஓட்டுனர்கள், 20,758 பேர், கட்டுமான தொழிலாளர்கள், 1,32,960 பேர், இதர உடல் உழைப்பு தொழிலாளர்கள், 1,76,254 உள்பட 3.29 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.
உறுப்பினர்க-ளுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கல்வி உதவித்-தொகை, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு ஆகியவற்றுக்கு உதவித்தொகை வழங்கப்ப-டுகிறது. தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்-களுக்கு மட்டும்தான் உதவித்தொகை கிடைக்கும்.ஆனால், உறுப்பினர்கள் இல்லாதவர்களும் பயன்பெறும் திட்டம் உள்ளதாக, மாவட்ட தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புதிட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும்போது இறக்கும் உறுப்பி-னர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல், உறுப்பினர் இல்லாதவர்களுக்கும் விபத்து ஏற்-பட்டால், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. கட்டு-மான தொழிலாளர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும். கடந்த மூன்று ஆண்டுகளில், 4 உறுப்பினர்கள் மற்றும், 11 உறுப்பினர் இல்லாதவர்கள் என மொத்தம், 15 பேர் கட்டுமான பணியின் போது இறந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழி-லாளர் நலவாரியத்தில், உறுப்பினராக இணைந்து அரசு தரும் பல்-வேறு சலுகைகளை பெறலாம். இவ்வாறு கூறினார்.