/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி 50வது தொடர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி 50வது தொடர் கண்டன ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி 50வது தொடர் கண்டன ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி 50வது தொடர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2024 11:08 AM
நாமக்கல்: மோகனுார் பகுதியில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, நாமக்கல்லில், 50வது தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, அதற்கான நிலத்தை, அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக்கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒருங்கிணைந்து, 'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' என்ற அமைப்பை துவக்கி, இதுவரை, 50 போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், 51வது போராட்டமாக, கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல்லில் நடந்தது. விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.
கொ.ம.தே.க., மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தமிழக உழவர் பேரியக்கம் மாநில துணை செயலாளர் பொன்ரமேஷ், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 'சிப்காட்'
திட்டத்தை கைவிடக்கோரி கோஷம் எழுப்பினர்.