sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை

/

நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை


ADDED : ஆக 18, 2025 02:53 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 59 டன் காய்க-றிகள், 24.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. இங்கு, தினசரி காலை, 5:00 மணி முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டு-வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்க-மாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான பொதுமக்கள் உழவர்

சந்தைக்கு வந்து தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்-வது வழக்கம். நேற்று உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியா-பாரம் நடந்தது. 165 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி-களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம், 46,130 கிலோ காய்கறிகள், 12,790 கிலோ பழங்கள், 30 கிலோ பூக்கள் என மொத்தம், 59,950 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்-டன.

அவற்றை, 11,790 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்க-ளுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். அவற்றின் மூலம், 24 லட்சத்து, 20,890 ரூபாய் அளவிற்கு விற்பனையா-னது.






      Dinamalar
      Follow us