/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உழவர் சந்தையில் 59 டன் காய்கறி ரூ.22.14 லட்சத்திற்கு விற்பனை
/
உழவர் சந்தையில் 59 டன் காய்கறி ரூ.22.14 லட்சத்திற்கு விற்பனை
உழவர் சந்தையில் 59 டன் காய்கறி ரூ.22.14 லட்சத்திற்கு விற்பனை
உழவர் சந்தையில் 59 டன் காய்கறி ரூ.22.14 லட்சத்திற்கு விற்பனை
ADDED : மார் 31, 2025 03:14 AM
நாமக்கல்: நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்-டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டுவந்து நேர-டியாக விற்பனை செய்கின்றனர்.
பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவை-யான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து, தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.அதன்படி, நேற்று உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 206 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்-கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். அதன்-படி, 47,745 கிலோ காய்கறிகள், 11,275 கிலோ பழங்கள், 25 கிலோ பூக்கள் என மொத்தம், 59,045 கிலோ விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்-டன. அவற்றை, 11,809 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 22 லட்சத்து, 14,925 ரூபாய்க்கு விற்பனையானது.
தக்காளி ஒரு கிலோ, 14 ரூபாய், கத்தரி, 48 ரூபாய், வெண்டை, 32 ரூபாய், புடலங்காய், 36 ரூபாய், பீர்க்கங்காய், 48 ரூபாய், பாகற்காய், 36 ரூபாய், சின்ன வெங்காயம், 34 ரூபாய், பெரிய வெங்காயம், 32 ரூபாய், இஞ்சி, 50 ரூபாய், பூண்டு, 115 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.v