/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்ரா பவுர்ணமியையொட்டி 61 டன் காய்கறி விற்பனை
/
சித்ரா பவுர்ணமியையொட்டி 61 டன் காய்கறி விற்பனை
ADDED : மே 12, 2025 03:17 AM
நாமக்கல்: நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை, அறுவடை செய்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
இன்று, 'சித்ரா பவுர்ணமி' என்பதாலும், பல பகுதிகளிலும் கோவில் திருவிழாக்கள் நடந்து வருவதாலும், நேற்று வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 213 விவசாயிகள், 49,615 கிலோ காய்கறி, 12,160 கிலோ பழம், 30 கிலோ பூக்கள் என மொத்தம், 61,805 கிலோ எடையுள்ள விளைபொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்தனர்.அவற்றை, 12,361 பொதுமக்கள் வாங்கி சென்றனர். இதன் மூலம், 24 லட்சத்து, 22,880 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகின. னது. தக்காளி ஒரு கிலோ, 14 ரூபாய், கத்தரி, 40 ரூபாய், வெண்டை, 30 ரூபாய், புடலங்காய், 42 ரூபாய், பீர்க்கங்காய், 60 ரூபாய், பாகற்காய், 40 ரூபாய், சின்ன வெங்காயம், 40 ரூபாய், பெரிய வெங்காயம், 25 ரூபாய், இஞ்சி, 45 ரூபாய், பூண்டு, 160 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.