sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று 'நீட்' தேர்வு 6,120 மாணவ, மாணவியர் பங்கேற்பு

/

மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று 'நீட்' தேர்வு 6,120 மாணவ, மாணவியர் பங்கேற்பு

மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று 'நீட்' தேர்வு 6,120 மாணவ, மாணவியர் பங்கேற்பு

மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று 'நீட்' தேர்வு 6,120 மாணவ, மாணவியர் பங்கேற்பு


ADDED : மே 05, 2024 02:29 AM

Google News

ADDED : மே 05, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், இன்று, 11 மையங்களில் நடக்கும், 'நீட்' தேர்வில், 6,120 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

இந்தியா முழுதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்பிற்காக, தேசிய தேர்வு முகமை மூலம் (என்.டி.ஏ.,) இன்று, 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 11 தேர்வு மையங்களில், மொத்தம், 6,120 மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதுகின்றனர். நடப்பாண்டில், பிளஸ் 2 முடித்தவர்கள், ஏற்கனவே பிளஸ் 2 முடித்து, 'நீட்' தேர்வை எழுதி தோல்வி அடைந்தவர்கள் மற்றும் எதிர்பார்த்த அளவு மதிப்பெண்கள் கிடைக்காதவர்கள் (ரிப்பீட்டர்ஸ்) உள்ளிட்டோர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், 2023ல், 5,276 பேர், 'நீட்' தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. அவர்களில், 5,210 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்தாண்டில், 6,120 பேர், 'நீட்' தேர்வை எழுத உள்ளனர். அதற்காக, மாட்டத்தில், 11 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பாச்சல் பாவை பொறியியல் கல்லுாரி தேர்வு மையத்தில், 1,000 பேர், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளியில், 700 பேர், நாமக்கல் டிரினிடி இன்டர்நேஷனல் பள்ளியில், 700 பேர், கீரம்பூர் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில், 670 பேர். நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், 600 பேர், நாமக்கல் தி ஸ்பெக்ட்ரம் அகாடமி பள்ளியில், 500 பேர், குமாரபாளையம் பல்லக்காபாளையம் ராயல் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், 550 பேர், எக்ஸல் பொறியியல் கல்லுாரியில், 450 பேர்.

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., அக்சரா அகாடமியில், 430 பேர், வித்யவிகாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், 280 பேர், ஏமப்பள்ளி ரமணி இன்டர்நேஷனல் பள்ளியில், 240 பேர் என, மொத்தம், 11 மையங்களில், 6,120 மாணவ, மாணவியர், 'நீட்' தேர்வு எழுதுகின்றனர்.

ஒவ்வொரு மையத்திற்கும், 5 போலீசார் மற்றும் அதிகாரிகள், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மாணவ, மாணவியர் தேர்வில் கலந்துகொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமையின் நாமக்கல் மாவட்ட குழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us