/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் அங்கன்வாடி பணியாளர் 96 பேர் கைது
/
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் அங்கன்வாடி பணியாளர் 96 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் அங்கன்வாடி பணியாளர் 96 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் அங்கன்வாடி பணியாளர் 96 பேர் கைது
ADDED : டிச 10, 2025 10:33 AM

நாமக்கல்: தமிழக அரசு அங்கன்வாடி சங்கங்களின் கூட்ட-மைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும், நேற்று மறியல் போராட்டம் நடந்தது. நாமக்கல்லில் நடந்த மறியல் போராட்-டத்திற்கு, தமிழ் மாநில அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் குர்ஷித்பேகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அனுராதா, மாநில செயற்குழு உறுப்-பினர் பாண்டிமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில், இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி உதவி-யாளுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அகவி-லைப்படியுடன் சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சி.எல்., நாள் மொத்தமாக வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு, பிழைப்பூதியம் வழங்க வேண்டும். காலி பணியி-டங்களை நிரப்ப வேண்டும்.
அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும், உத-வியாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 96 பேர் கைது செய்யப்-பட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர்.

