sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 9.75 சதவீதம் போனஸ் ஒப்பந்தம்

/

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 9.75 சதவீதம் போனஸ் ஒப்பந்தம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 9.75 சதவீதம் போனஸ் ஒப்பந்தம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 9.75 சதவீதம் போனஸ் ஒப்பந்தம்


ADDED : அக் 30, 2024 06:39 AM

Google News

ADDED : அக் 30, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, இந்தாண்டு தீபாவளி போனஸ், 9.75 சதவீதம் வழங்குவதாக உடன்பாடு ஏற்பட்டு, 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை, கடந்த, 24ல் தொடங்கியது. பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் இரு தரப்பில் இருந்து நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

முதல்கட்ட பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கத்தினர், 20 சதவீதம் போனஸ் கேட்டு வலியுறுத்தினர். ஆனால், உரிமையாளர் சங்கத்தினர், '9.50 சதவீதம் போனஸ் வழங்குவதாக' கூறினர். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. 2ம் கட்ட பேச்சுவார்த்தை, கடந்த, 27ல் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி வரை நடந்தது.

இதில், பள்ளிப்பாளையம் சுற்று வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு, இந்தாண்டு தீபாவளி போனஸ், 9.75 சதவீதம் என உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு, 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமானது. புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக, 2,000 ரூபாய் வரை கிடைக்கும்.






      Dinamalar
      Follow us