sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் கோர்ட்டில் சாட்சியம் அளித்தபோது மாரடைப்பால் மயங்கி விழுந்த அரசு அதிகாரி

/

நாமக்கல் கோர்ட்டில் சாட்சியம் அளித்தபோது மாரடைப்பால் மயங்கி விழுந்த அரசு அதிகாரி

நாமக்கல் கோர்ட்டில் சாட்சியம் அளித்தபோது மாரடைப்பால் மயங்கி விழுந்த அரசு அதிகாரி

நாமக்கல் கோர்ட்டில் சாட்சியம் அளித்தபோது மாரடைப்பால் மயங்கி விழுந்த அரசு அதிகாரி


ADDED : அக் 05, 2024 01:33 AM

Google News

ADDED : அக் 05, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலரும், தமிழ்நாடு காகித ஆலை மேலாண் இயக்குனருமான சந்தீப் சக்சேனா, வழக்கு ஒன்றில் ஆஜராக, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று காலை வந்தார்.

மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில், கூண்டில் நின்று சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பிறகு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சாட்சியம் அளித்து கொண்டிருந்த கூடுதல் தலைமை செயலர் மயங்கி விழுந்ததால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us