sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாதீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு

/

மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாதீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு

மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாதீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு

மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாதீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு


ADDED : ஜன 31, 2025 01:25 AM

Google News

ADDED : ஜன 31, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாதீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு

நாமக்கல்:நாமக்கல் அடுத்த பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, 8வது வார்டு பெரியூரில் பிரசித்திபெற்ற மருதகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கொங்கு வேளாளர் சமூகத்தின் பண்ணை குலம் மற்றும் துாரன் குலத்தாருக்கு பாத்தியப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பின், கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வரும், 2 காலை, 9:45 மணிக்கு

கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை, மோகனுார் காவிரி ஆற்றில் நீராடி, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு யானை, குதிரை, நாட்டு மாடு, பசுவுடன் ஊர்வலமாக நாமக்கல் ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர். அங்கு தீர்த்தக்குடங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பின், தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட், மெயின் ரோடு, சேலம் சாலை கார்னர், திருச்செங்கோடு சாலை வழியாக சென்று பெரியூர் கோவிலை வந்தடைந்தனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை, திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, பழனிவேலு, ராமசாமி, குமாரசாமி, திருப்பணி குழு தலைவர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us