/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூட்டியிருந்த கடையை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு
/
பூட்டியிருந்த கடையை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு
ADDED : ஆக 11, 2025 06:11 AM
நாமக்கல்: நாமக்கல்லில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர், பூட்-டிய கடைகளை ஒவ்வொன்றாக திறக்க முயற்சி செய்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது.
நாமக்கல் - சேலம் சாலையில், பூட்டியிருந்த ஒவ்வொரு கடைகளின் பூட்டையும், ஷட்டர்க-ளையும் மர்ம நபர் ஒருவர் தட்டிக்கொண்டி-ருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்-தவர்கள், 'திருடனாக இருப்பானோ' என, நினைத்து அவரை பிடித்து வைத்தனர். தகவல-றிந்த நாமக்கல் போலீசார், அவரை பிடித்து விசா-ரணை நடத்தினர்.
அப்போது அந்த நபர், 'பூட்டியிருந்த கடையின் உள்ளே தன் மனைவி, அம்மா, அக்கா' இருக்கின்-றனர் என கூறியதால் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், எருமப்பட்டி அடுத்த பவித்திரம்-புதுாரை சேர்ந்த உதயகுரு, 37, என்பதும், மன-நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் ஒரு வாரத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, உதயகுருவின் குடும்பத்தாரை வரவழைத்த போலீசார், உதயகுருவை அவர்க-ளிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம், நாமக்-கல்லில் பரபரப்பு ஏற்படுத்தியது.