sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 08, 2025 04:13 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல் பூங்கா சாலையில், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி-யாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் குர்ஷித்பேகம் தலைமை வகித்தார். இதில், அங்கன்-வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி-யுடன் கூடிய ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும். புதிய, '5ஜி' மொபைல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொபைல் போனில் உள்ள, டார்ச் லைட்டை ஒளிரவிட்டு கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us