sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெண்பட்டு அலங்காரத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்

/

வெண்பட்டு அலங்காரத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்

வெண்பட்டு அலங்காரத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்

வெண்பட்டு அலங்காரத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்


ADDED : மே 27, 2025 01:41 AM

Google News

ADDED : மே 27, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், வைகாசி அமாவாசையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி வெண்பட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒரே கல்லில் உருவான, 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, தமிழ் மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட முக்கிய தினங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும்.

அதன்படி, வைகாசி அமாவாசையான, நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, வெண்பட்டு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us