sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் 22 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

/

நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் 22 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் 22 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் 22 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு


ADDED : டிச 29, 2024 01:06 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்

22 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

நாமக்கல், டிச. 29-

நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் கூடுதலாக, 22, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், முன்னேற்பாடு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில், கைகூப்பி வணங்கிய நிலையில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி, வடமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும், தினமும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். தினமும், காலை, 9:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலை சாத்துபடி செய்யப்படும். தொடர்ந்து, 10:00 மணிக்கு, அபிஷேகம் நடக்கும். மார்கழி அமாவாசை நாளில், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் பிறந்தததாக ஐதீகம். இதையொட்டி ஆண்டுதோறும், அந்த நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு விழா, நாளை மார்கழி அமாவாசை மூலம் நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது. அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, 1 லட்சத்து, 8 வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இதையடுத்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, சுவாமிக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடக்கிறது.

வளாகத்தில் ஏற்கனவே, 32 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என்பதால், கூடுதலாக, 22 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னேற்பாடு பணிகளும் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்களின் வசதிக்காக, மூன்று தற்காலிக கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us