sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேர்தலில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கிக்கு படையெடுக்கும் மக்கள்

/

தேர்தலில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கிக்கு படையெடுக்கும் மக்கள்

தேர்தலில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கிக்கு படையெடுக்கும் மக்கள்

தேர்தலில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கிக்கு படையெடுக்கும் மக்கள்


ADDED : நவ 21, 2024 06:41 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: வரும், 2026 சட்டசபை தேர்தலில், நகை கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து, தற்போதே கூட்டுறவு வங்கிகளுக்கு, நகைகளுடன் மக் கள் படையெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், ஆயிரக்க-ணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் மூலம் விவ-சாயிகளுக்கு தேவையான பயிர்கடன், நகைக்கடன், கறவை மாடு, சிறு வணிக கடன், மத்திய கால கடனான கிணறு வெட்டுதல், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தல், மூங்கில் வாங்குதல் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்-கங்களும், தங்க நகை அடமானத்தில் கடன் வழங்குகின்றன. கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்-கையில், தாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்வ-தாக அறிவித்தது.

அதன்படி, கூட்டுறவு நிறுவனங்களில், 2021 மார்ச் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்-டன. அதனடிப்படையில், 14.51 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்-யப்பட்டு, 6,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும், 2026 சட்டசபை தேர்தலில், கட்சியினர் அளிக்கும் தேர்தல் வாக்குறுதியில், 'நகை கடன் தள்ளுபடி' அறி-விப்பு இடம்பெறும் என எதிர்பார்த்துள்ளனர். அதனால், தற்-போதே கூட்டுறவு நிறுவனங்களில், தங்க நகைகளை அடமானம் வைத்து, நகை கடன் பெறுவதற்காக, ஏராளமானோர் படையெ-டுக்கின்றனர். குறிப்பாக, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், அதிக அளவில் நகை கடன் பெறுவதற்காக, பெண்கள் ஆர்வமாக உள்ளனர்.






      Dinamalar
      Follow us