ADDED : மார் 31, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் தாலுகா, ஆண்டாபுரம் பஞ்., தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் முத்து-லட்சுமி தலைமை வகித்தார்.
பஞ்., செயலாளர் சுப்ரமணி வர-வேற்றார். விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிய-ருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.