/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்
/
கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 17, 2025 01:24 AM
நாமக்கல் :'நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025--26ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025--26ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே, ஜூன், 20 மாலை, 5:00 மணி வரை விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய் -செலுத்தி விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025 ஜூலை, 1ல் குறைந்தபட்சம், 17 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியின் காலம், 12 மாதம், இரண்டு பருவ முறைகளாக தமிழ் வழியில் மட்டும் கற்பிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், 20,750 ரூபாய். பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து அதில் சுயஒப்பமிட்டு நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டை மூலமோ அனுப்ப வேண்டும்.
விபரங்களுக்கு, www.tncu.tn.gov.in என்ற இணையதள வழியிலோ அல்லது நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 796, சேலம் பிரதான சாலை (மயில்வாகனம் காம்ப்ளக்ஸ்), முருகன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே, நாமக்கல்--637001 என்ற முகவரியிலோ, 04286-290908 தொலைபேசியிலோ அல்லது 9080838008 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.