/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்டத்தில் 'முதல்வர் மருந்தகம்' அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
/
நாமக்கல் மாவட்டத்தில் 'முதல்வர் மருந்தகம்' அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
நாமக்கல் மாவட்டத்தில் 'முதல்வர் மருந்தகம்' அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
நாமக்கல் மாவட்டத்தில் 'முதல்வர் மருந்தகம்' அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
ADDED : நவ 08, 2024 01:27 AM
நாமக்கல் மாவட்டத்தில் 'முதல்வர் மருந்தகம்'
அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
நாமக்கல், நவ. 8-
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள, பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மருந்தகம் அமைக்க விரும்புவோர் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்
முனைவோர் வரும், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு, 110 சதுர அடி இருக்கும் வகையில் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்துவரி ரசீது (அல்லது) குடிநீர் வரி ரசீது (அல்லது) மின்இணைப்பு ரசீது, வாடகை இடம் எனில் அந்த இடத்திற்கான உரிமையாளரிடம் ஒப்பந்த பத்திரம் பெற்று, விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம், மூன்று லட்சம் ரூபாய் இரு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில்முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு, கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து, முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில்முனைவோர், முதல்வர் மருந்தகத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளான அலமாரிகள், ஏ.சி., பிரிட்ஜ் மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதி கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.