sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சட்டசபை மனுக்கள் குழு கூட்டம்; 20ம் தேதிக்குள் மனு அனுப்பலாம்

/

சட்டசபை மனுக்கள் குழு கூட்டம்; 20ம் தேதிக்குள் மனு அனுப்பலாம்

சட்டசபை மனுக்கள் குழு கூட்டம்; 20ம் தேதிக்குள் மனு அனுப்பலாம்

சட்டசபை மனுக்கள் குழு கூட்டம்; 20ம் தேதிக்குள் மனு அனுப்பலாம்


ADDED : டிச 06, 2024 07:35 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டசபையின், 2024--25ம் ஆண்டுக்கான மனுக்கள் குழுவினர், விரைவில் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். இதனையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்து மனுக்களை (5 நகல்கள், தமிழில் மட்டும்) தேதியுடன், மனுதாரரின் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை, சென்னை 600 009. என்ற முகவரியிட்டு, நேரடியாகவோ, மாவட்ட கலெக்டர் அல்லது டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., தாசில்தார் மூலமாகவோ வரும், 20ம் தேதிக்குள் அனுப்பலாம்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் உள்ள, பொது பிரச்னைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்களில் தனிநபர் குறை, கோர்ட்டில் உள்ள பிரச்னை, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், பல்வேறு கடன் உதவி வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை குறித்து இருத்தல் கூடாது.

சட்டசபை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். மனுதாரர் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து, மனுதாரர்களுக்கு தனியாக தகவல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us