sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவள்ளியில் மகசூலை அதிகரிக்க வேளாண் உதவி இயக்குனர் யோசனை

/

மரவள்ளியில் மகசூலை அதிகரிக்க வேளாண் உதவி இயக்குனர் யோசனை

மரவள்ளியில் மகசூலை அதிகரிக்க வேளாண் உதவி இயக்குனர் யோசனை

மரவள்ளியில் மகசூலை அதிகரிக்க வேளாண் உதவி இயக்குனர் யோசனை


ADDED : மார் 17, 2025 04:10 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை,: மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்-குனர் உமா யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க மரவள்ளி பூஸ்டர் பயன்படுத்துவது அவ-சியம். மரவள்ளி பூஸ்டர்- ஒரு கொள்கலனில், 40 கிலோ மாட்டு சாணத்தை, 100 லிட்டர் நீரில் கலந்து வடி-கட்டியபின், மரவள்ளி பூஸ்டர் பையில் உள்ள பை-1 மற்றும் பை-2 கலவையை நன்றாக கலந்து, ஒரு சாக்கு பை கொண்டு மூடி இறுக கட்டி, 10 நாட்கள் நொதிக்க விட வேண்டும். இடையில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை கலவையை நன்றாக கலக்கி மீண்டும் கட்டி வைக்கவும். 10 நாட்கள் கழித்து நொதித்த கல-வையை வடிகட்டவும். இத்துடன் பை-3 கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் கலந்து, 200 லிட்டர் கரைசலாக்கி மர-வள்ளி பயிரின் மீது மாலை வேளையில் இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்கவும்.

ஒரு ஏக்கருக்கு ஒரு முறை தெளிப்பதற்கு ஒரு பை (பை-1,2, 3 அடங்கியது) மரவள்ளி பூஸ்டர் பயன்ப-டுத்தவும். மரவள்ளி நடவு செய்து, 2,- -3, 4-வது மாதங்களில், மூன்று முறை தெளிக்கவும். -மரவள்ளி தேமல் நோய் தாக்கத்தை குறைக்கும். ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைக்கும். நோய்கள் குறைந்து மகசூல் அதிக-ரிக்கும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us