ADDED : அக் 13, 2025 02:09 AM
ப.வேலுார்;ப.வேலுார் அதன் சுற்றுவட்டாரங்களான, பரமத்தி, பொத்தனுார், நன்செய் இடையாறு உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில், வாழை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூவன், ரஸ்தாளி, கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அவ்வாறு பயிரிடப்படும் வாழை, ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து எடுத்து செல்வர். இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த வாரம், 550 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், 300 ரூபாய்; 500 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி ரகம், 300 ரூபாய்; 600 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி ரகம், 250 ரூபாய்; 7 ரூபாய்க்கு விற்ற மொந்தன் காய் ஒன்று, ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.