sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரிசைகட்டும் சுப முகூர்த்தம் வாழைத்தார் விலை உயர்வு

/

வரிசைகட்டும் சுப முகூர்த்தம் வாழைத்தார் விலை உயர்வு

வரிசைகட்டும் சுப முகூர்த்தம் வாழைத்தார் விலை உயர்வு

வரிசைகட்டும் சுப முகூர்த்தம் வாழைத்தார் விலை உயர்வு


ADDED : ஆக 19, 2025 03:28 AM

Google News

ADDED : ஆக 19, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார் தாலுகா, பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொந்தன் ரக வாழைகளை அதிகம் பயிரிட்டுள்ளனர். விளைந்த வாழைத்தார்களை வெட்டி, ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

அதன்படி, நேற்று நடந்த ஏலத்திற்கு, 600 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், நேற்று, 400 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 400 ரூபாய், 250 ரூபாய்க்கு விற்ற கற்பூரவள்ளி, 350 ரூபாய், மொந்தன் காய், 5 ரூபாய்க்கு விற்றது, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆடி முடிந்து ஆவணி மாதம் தொடங்கியதால், முகூர்த்த நாட்கள் வரிசை கட்டுகின்றன. இதனால், வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us