ADDED : டிச 14, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த வாரம் பெய்த கன
மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்-டது.
இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்தனர். பின், மழை குறைந்-ததும், கடந்த, 5ல் மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க, சுற்-றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை பார்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டது. தற்போது, 2 நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று முதல் அருவிகளில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.